Sunday, 22 December 2019

சிந்தனைக்கு உணவு 4

🌸 *ஆனந்த மார்க யோக அறிவியல்🌸

🌸சிந்தனைக்கு உணவு 4* 🌸

 *மாமிசம் சாப்பிட்டால் என்ன தவறு* ?

தாவர உணவைப் பற்றி பேசுகின்றபோது நிறையபேர் கேட்கின்ற கேள்வி என்னவென்றால், “மாமிசம் சாப்பிட்டால் என்ன தவறு? கோடிக்கணக்கான மனிதர்கள் அதை சாப்பிடும்போது நான் ஏன் அதை நிறுத்த வேண்டும்?” என்பதுதான்.
மாமிசம் ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கு மிக முக்கிய காரணங்கள் உள்ளன. அவை உணர்ச்சிவேகக் காரணங்களோ அல்லது உணர்ச்சிவசமான காரணங்களோ அல்ல, அதற்கு மாறாக அறிவுப்பூர்வமான மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் ஆகும். இந்த விபரங்களை கவனமாக புரிந்துகொண்டால், நிச்சயமாக நீங்கள் இப்போதே தாவர உணவுகளை சாப்பிட முயற்சி மேற்கொள்வீர்கள்.


 *நமது முன்னோர்கள் எப்போதும் மாமிச உணவைத்தானே சாப்பிட்டார்கள், இல்லையா?*

இல்லை, இன்றுவரை ஆராய்ச்சி செய்ததில், விஞ்ஞானிகளின் முடிவு என்னவென்றால், நம்முடைய முன்னோர்கள் தாவர உணவைத்தான் உண்டார்கள் என்பதுதான். அவர்கள் உணவே கிடைக்காத காலங்களைத் தவிர மற்ற காலங்களில் மாமிசத்தை சாப்பிடவே இல்லை. கடந்த பனியுகத்தில்தான், பழங்களும், கொட்டைகளும், காய்கறிகளும் கிடைக்காமல் போனதால், நம்முடைய முன்னோர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக விலங்குகளின் மாமிசத்தை சாப்பிடத் துவங்கினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக வடதுருவத்தில் வாழுகின்ற எஸ்கிமோhக்கள் மற்றும் பழங்குடியினர் போன்றவர்கள், அவசியத்தின் காரணமாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ, சூழ்நிலைக் காரணமாகவோ அல்லது சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தாலோ அந்த மாமிசம் சாப்பிடுகின்ற பழக்கமானது பனியுகத்திற்குப் பின்பும் தொடர்ந்தது. ஆனாலும் வாரலாறு முழுவதிலும் பல தனி மனிதர்களும், சில இனத்தைவர்களும் உடல் நலத்திற்கும், மனத்தூய்மைக்கும் அல்லது ஆன்மீக மேன்மைக்கும் உகந்த சுத்தமான உணவின் முக்கியத்தை உணர்திருந்தார்கள், அதனால் அவர்கள் தாவர உணவை உண்பவர்களாகவே இருந்தார்கள்.

🌸🙏🌸
(ஆனந்த மார்க - Food for Thought - என்ற  புத்தகத்திலிருந்து)

ஆனந்த மார்க தியான யோகத்தை அறிந்துகொள்ள,  9380851222 எண்ணில் தொடர்புகொள்ளவும்

.....தொடரும்...

மாமிசம் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்து

🌸 *ஆனந்த மார்க யோக அறிவியல் - சிந்தனைக்கு உணவு* 🌸

மாமிசம் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்துகள் என்னென்ன?(பாகம் -1)

 மிக அதிகமாக மாமிசத்தையும் கொழுப்பையும் சாப்பிட்டு வாழ்கின்ற எஸ்கிமோக்கள் சராசரியாக 27½ வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. இரஸ்யாவின் கிழக்கு பகுதியில் வாழ்கின்ற பழங்குடி நாடோடிகளான கிர்கர்கள் மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் சீக்கிரமாக முதுமை அடைந்துவிடுகிறார்கள், சீக்கிரமாகவே இறந்தும் விடுகிறார்கள். அவர்கள் 40 வயதை தாண்டுவது கிடையாது. ஆனால் அதற்கு மனித ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள், மாமிசம் சாப்பிடாதவர்களின் உடல் ஆரோக்கியம், பலம், நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் தருகின்றன. *உதாரணம்* : பாக்கிஸ்தானில் உள்ள ஹன்ஸா மக்கள், மெக்ஸிகோவில் உள்ள ஒட்டோமி பழங்குடி மக்கள், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் வாழ்கின்ற பூர்வீக மக்கள். இந்த மக்கள் 110 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உயிர் வாழ்வது ஒரு சாதாரண விஷயம். உலக சுகாதார புள்ளிவிவரங்கள் தெளிவாக தெரிவிப்பது என்னவென்றால், அதிகமாக மாமிசத்தை சாப்பிடுகின்ற நாடுகளில் வாழுகின்ற மனிதர்கள் இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், தாவர உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்ற நாடுகளில் உள்ள மக்கள் இதுபோன்ற நோய்களால் மிகக் குறைவாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. (உண்மையில், 1977ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சட்டமன்ற சத்துணவுக் குழுவானது “மாமிச உணவைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானிய வகைகள் சாப்பிடுவதை அதிகரிப்போம்” என்று பரிந்துரை செய்தது. இதை “அமெரிக்க ஐக்கிய நாட்டின் உணவு இலட்சியம்” என்று அறிவித்தது). *மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கு ஏன் அதிக நோய்கள் வருகின்றன, ஏன் அவர்கள் குறைந்த ஆயுளில் இறந்து போகிறார்கள்.* விஷத்தன்மை: கொல்லப்படுவதற்கு சற்று முன்பும், கொல்லப்படுகின்றபோதும், பயப்படுகின்ற விலங்கின் உடலில் ஆழமான இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் உடல் முழுவதும் நச்சுத்தன்மை பரவுகிறது. இவ்வாறு வேதனை-விஷமானது அந்த இறந்த உடல் முழுவதும் பரவுகிறது. மனக்கிளர்ச்சியானது உடலில் மிக அதிகமான உயிர்-வேதியல் மாற்றங்களை உண்டாக்குகிறது என்பது இன்றைக்கு எல்லோரும் அறிந்த உண்மை. குறிப்பாக, இரத்தத்தில் இயக்குநீர் மாற்றங்கள் உண்டாகிறது என்பது உண்மை. அளவுக்கதிகமான கோபம் அல்லது பயம் ஏற்படுகின்றபோது உடலில் நோய் உண்டாகிறது. மனிதர்களைப் போலவே ஆபத்தான தருணங்களில் விலங்குகளின் உடலிலும் இதுபோன்ற உயிர்-வேதியல் மாற்றங்கள் மிக அதிகமாக உண்டாகின்றன. தங்களைச் சுற்றியுள்ள விலங்குகள் வாழ்வுக்கும் பிழைப்பதற்கும் போராடி, தப்பிக்க முடியாமல் இறப்பதை பார்த்துக்கொண்டிருக்கின்ற மற்ற விலங்குகளின் இரத்தத்தில் உள்ள இயக்குநீர்களின் அளவு - குறிப்பாக அட்ரினாலின் என்ற இயக்குநீரின் அளவு தீவிரமாக அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமாக இப்படி சுரந்த இயக்குநீர்கள் அந்த விலங்கின் சதையில் தங்கி இருப்பதால், அந்த உடலை சாப்பிடுகின்ற மனிதர்களின் மென்தசைகளில் விஷத்தன்மையை உண்டாக்கி, பிறகு அது அந்த மனிதரின் மனதிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. அமெரிக்க ஊட்டச்சத்து நிறுவனம் கூறுகிறது, “விலங்குகளின் பிணத்தில் உள்ள சதையில் விஷத்தன்மையான இரத்தமும், அதன் துணைப் பொருள்களும் நிரம்பி உள்ளன” என்று. *புற்றுநோய்* : அண்மையில் தாவர உணவு உண்ணுகின்ற, ஐம்பதாயிரம் நபர் கொண்ட ஒரு குழுவிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவானது புற்றுநோய் ஆராய்ச்சி உலகத்தையே உலுக்கிவிட்டது. அந்த ஆய்வு மிகத்தெளிவாய் தெரிவிப்பது என்னவென்றால், இந்த மனிதர்களில் புற்றுநோய் உள்ளவர்கள் வியக்கத்தக்க வகையில் மிகக் குறைவாய் இருந்தார்கள் என்பதுதான். இதே எண்ணிக்கை மற்றும் இதே வயதுள்ள ஆண்களும் பெண்களும் உள்ள மற்ற உணவு பழக்கமுள்ள ஒரு குழுவினரோடு ஒப்பிட்டு பார்த்ததில் முதலாவது குழுவைச் சேர்ந்த மனிதர்களிடம் எல்லா வகையான புற்றுநோய் அறிகுறிகளும் மிகக் குறைவாகவே இருந்தது, இவர்களுடைய ஆயுட்காலமும் நீண்டதாய் இருந்தது. அண்மையில் கலிஃபோர்னியாவில் வாழ்கின்ற மோர்மோன் இனத்தவரை ஆய்வு செய்ததில் புற்றுநோயின் அளவு மற்ற மனிதர்களைவிட 50 விழுக்காடு இவர்களிடம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மோர்மோன்கள் மாமிசம் சாப்பிடுவது மிகவும் குறைவு. மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கு அதிகமாக புற்றுநோய் வருவது ஏன்? நாட்பட்ட பழைய மாமிசம் பிசுபிசுப்பாகவும் சாம்பல்நிறம் கலந்த பச்சை நிறமாயும் மாறிவிடுவது ஒரு காரணமாய் இருக்கலாம். மாமிச தொழிற்சாலைகளில் இந்த நிறமாற்றத்தை மறைப்பதற்காக நைட்ரைட்டுகள், நைட்ரேட்டுகள் மற்றும் பிற பதனப்பொருள்களைச் சேர்க்கிறார்கள். இந்த பதனப்பொருள்கள் நிறம்மாறிய மாமிசத்தை சிவப்பு நிறமாகக் காட்டுகிறது. ஆனால் அண்மையில் இந்த பதனப்பொருள்கள் புற்றுநோயை தூண்டுகின்றன என்று கண்டறிந்துள்ளனர். டேன்னஸ்ஸீயில் உள்ள ஓக் ரிட்ஜ் நேஷனல் லேபரட்டரியில் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகின்ற டாக்டர் வில்லியம் லிஜின்ஸ்கி கூறுகையில், “நான் நைட்ரேட் சேர்க்கப்பட்ட உணவை என்னுடைய பூனைக்குகூட கொடுப்பதில்லை” என்று கூறுகிறார். மேலும், பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் மாமிசம் சாப்பிடுகின்ற மனிதர்களின் குடல் பாக்டீரியாக்களையும் மாமிசம் சாப்பிடாத மனிதர்களின் குடல் பாக்டீரியாக்களையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தபோது அதிகமான வித்தியாசம் இருப்பதை கண்டறிந்தனர். மாமிசம் சாப்பிடுகின்றவர்களுடைய குடலானது அதிலுள்ள ஜீரண நீருடன் எதிர்வினை புரிந்து புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனப் பொருள்களை உண்டாக்குகின்றன என்பதை கண்டறிந்தனர். எதனால் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற அதிக மாமிசம் சாப்பிடுகின்ற நாடுகளில் குடல் புற்றுநோயாளிகள் அதிகமாகவும் இந்தியா போன்ற மாமிசம் குறைவாக சாப்பிடுகின்ற நாடுகளில் குறைவாகவும் உள்ளனர் என்பதை விளக்குவதற்கு இந்த சான்றுகளே போதுமானது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடல் புற்றுநோய்தான் நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் உள்ள இரண்டாம் வகை புற்றுநோயாகும். ஸ்காட்லாந்து மக்கள் ஆங்கிலேயர்களைவிட 20மூ அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுகின்றவர்கள். உலகிலேயே மிக அதிகமான குடல் புற்றுநோயாளிகள் உள்ள நாடுகளில் இந்த நாடும் ஒன்றாகும் *இரசாயன உணவு:* மாமிசம் சாப்பிடுவதை, ‘உணவுச் சங்கிலியின் உச்சியில் உண்பது’ என்று சொல்வார்கள். இயற்கையிலேயே உண்பவர்களில் மிக நீண்ட சங்கிலி அமைப்பு உள்ளது. தாவரங்கள் சூரிய ஒளியை, காற்று மற்றும் நீர் ஆகியவற்றை ‘உண்ணுகின்றன’, விலங்குகள் தாவரங்களை உண்ணுகின்றன, பெரிய விலங்குகள் அல்லது மனிதர்கள் சிறிய விலங்குகளை உண்ணுகின்றனர். இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள விளைநிலங்களில் விஷமுள்ள இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி பயிர்களை வளர்க்கிறார்கள். இந்தப் பயிர்களையும் புல்லையும் சாப்பிடுகின்ற விலங்குகளின் உடல் சதையில் இந்த விஷங்கள் தங்கி இருக்கின்றன. உதாரணமாக, வயலில் னுனுவு என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது, இது மிகவும் சக்திமிக்க விஷமாகும், இது புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் தீவிரமான கல்லீரல் நோய்களை உண்டாக்கக்கூடியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த னுனுவு மற்றும் இதுபோன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் விலங்குகளின் மற்றும் மீன்களின் கொழுப்பில் சேர்த்துவைக்கப்படுகின்றன. ஒருமுறை சேர்ந்துவிட்டால் அது அழிவது கடினம். இவ்வாறு பசுக்கள் சாப்பிடுகின்ற புல் மற்றும் தீவனங்களில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் அவற்றின் உடலில் தங்கி இருக்கின்றன, அந்த மாமிசத்தை நீங்கள் சாப்பிடும்போது அந்த விலங்கு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உடலில் சேர்த்துவைத்திருந்த னுனுவு மற்றும் பிற இரசாயனங்களை நீங்கள் உங்களுடைய உடலில் ஏற்றுக்கொள்கிறீர்கள். உணவு சங்கிலியின் ‘உச்சி’யில்(முடிவில்) மனிதான்தான் கடைசியில் உண்பவனாக இருக்கிறான். அதனால் அவனே அதிகபட்சமான விஷத்தன்மைகொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை ஏற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறான். ஆனால் மாமிசத்தில் உள்ள விஷத்தன்மை இத்துடன் நின்றுவிடவில்லை. மாமிச விலங்குகள் நன்றாக கொழுப்பதற்காகவும், விரைவாக வளர்வதற்காகவும், மாமிசத்தின் நிறத்தை கூட்டுவதற்காகவும் நிறைய இரசாயனங்களை இந்த விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள். மாமிசத்தை அதிகமாக உற்பத்தியாக்கி, அதிக இலாபம் ஈட்டுவதற்காக, பசியை தூண்டுகின்ற, நோய் கிருமிகளை கொல்லும் மருந்துகள் மற்றும் பல இரசாயன கலவைகளை இந்த விலங்குகளுக்கு கொடுத்து, அதிகப்படியான உணவை திணிக்கிறார்கள். 18.7.1971 அன்று நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியில், “மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எதிர்கொள்ளுகின்ற ஆபத்து என்னவென்றால், விலங்குகளுக்கு கொடுக்கப்படுகின்ற நைட்ரைட்டுகள், நைட்ரேட்டுகள், இயக்குநீர்கள், நோய்எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பல இரசாயனங்களின் கசடுகளும், சல்மோனெல்லா போன்ற நுண்கிருமிகளும் விலங்குகளின் சதைகளில் தங்கி உள்ளன. இவை யாவும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களாகும் என்பதுதான். இன்னும் சொல்லப்போனால், நிறைய விலங்குகள் அவை மாமிசத்திற்காக வெட்டப்படுவதற்கு முன்னதாகவே இந்த இரசாயன மருந்துகளால் இறந்தேவிடுகின்றன என்பதுதான் உண்மை. ஆய்வுகளில் தெரிந்த உண்மை என்னவென்றால், மாமிசத்திலும் மீன்களிலும் உள்ள இத்தகைய இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்குகிறது, கருக்கலைதல், கர்ப்பிணிகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் மிகுதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதுதான். அதனால் கருவுற்ற தாய்மார்கள் பிறக்கப்போகும் தங்களுடைய குழந்தைகளின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு, தங்களுடைய உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். -----மாமிசம் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்துகள் என்னென்ன? - இரண்டாம் பாகம், அடுத்தப் பதிவில் பார்க்கவும்🙏 🌸🙏🌸 (ஆனந்த மார்க - Food for Thought - என்ற புத்தகத்திலிருந்து) .....தொடரும்...

Thursday, 19 December 2019

நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி 1 - முன்னுரை

கண்ணை மூடி உட்கார்ந்தால் அதன் பெயர் தியானமா?  மன அமைதி கிடைத்திடுமா? பிரச்சனைகள் தொலைந்தால்தான் மன அமைதி கிடைக்கும். தியானம் என்று கண்ணை மூடி உட்கார்ந்த உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்த வரலாறு இருக்கிறதா? ஆனால் தியானமே தீர்வு. அதை அவரவர் விருப்பத்திற்கு செய்ய முடியாது. முறைப்படிதான் செய்தாக வேண்டும். இதோ ஆனந்த மார்கம் உங்களுக்கு மிச்சரியான வழிகாட்டுகிறது. இந்த இணைப்பிற்குள் செல்லுங்கள்

https://youtu.be/ANXK8QLQIr8

நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி பதிவுகளை  தொடர்ந்து பாருங்கள்

சிந்தனைக்கு உணவு 3

🌸ஆனந்த மார்க யோக அறிவியல் 🌸

 🌸சிந்தனைக்கு உணவு 3🌸

🌿தமோ குண உணவுகள்: 🌿

மாமிசம், மீன், வெங்காயம், பூண்டு, முட்டைகள், காளான்கள், மது, புகையிலை, மருந்துகள் மற்றும் நொதிக்க வைத்த, ஊசிப்போன மற்றும் கெட்டுப்போன உணவுகள் தமோ குண உணவுகளாகும். உடல் ஆரோக்கியத்தையும் மன உயர்வையும் விரும்புகின்றவர்கள் இந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆனாலும் சில குறிப்பிட்ட தருணங்களில், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அல்லது ஒரு மனிதருடைய உடல் உழைப்புக்கு ஏற்றவாறு இந்த உணவுகளை சாப்பிடலாம்*. உதாரணமாக, மிகக் கடுமையான குளிர்காலத்தில் மாமிசமும் சிறிதளவு மதுவும் உடலை சூடாக வைத்திருப்பதற்கு தேவையாக இருக்கலாம்.

🌿காளான்கள்:🌿

சைவ உணவு சாப்பிடுகின்ற சிலர் காளான்களை மாமிச உணவில் உள்ள புரதத்திற்கு மாற்று உணவாக கருதுகின்றனர். காளான்களில் அதிகப் புரதப்பொருள் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அது மனதிற்கும் உடலுக்கும் நச்சுத்தன்மையைத் தரக்கூடியது. ஒளிச்சேர்க்கையில்(சூரிய ஒளியிலிருந்து சக்தி பெறுதல்) வாழுகின்ற மற்றத் தாவரங்களில் உள்ளதுபோல இந்த காளான்களில் பச்சயம் கிடையாது. அதனால் இவை சூரிய சக்தியை பயன்படுத்துவது கிடையாது. அதனால் இவை நிச்சயமாக இறந்துபோன தாவரங்கள், விலங்குகள், விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றிலிருந்துதான்  அதற்குத் தேவையான சத்துக்களை பெறுகின்றன. மரணத்திலிருந்தும், இருளில் இருந்தும் தங்களுக்குத் தேவையான சக்தியை பெறுகின்ற இந்தக் காளான்கள், அவற்றின் தமோகுணப் பண்புகளை அவற்றை  சாப்பிடுகின்றவர்களுக்குள் செலுத்திவிடுகின்றன. சாப்பிடும் வகையைச் சார்ந்த அதிக விலையுள்ள காளான்கள்கூட, அதிகமாக சாப்பிட்டால் ஜீரணமாவதில்லை, மேலும் அவை  மனத்தை மந்தமாக்கி, உடலை சோம்பலாக்கி தூக்கத்தை தூண்டிவிடுகின்றன. பல சமயங்களில் இந்த காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக செலவளிக்கின்ற சக்தியானது அதிலிருந்து பெருகின்ற சக்தியைவிட அதிகமாக இருக்கிறது.

காளான்கள் விரைவில் அழுகிப்போய், நச்சுத்தன்மையுள்ள பொருளாக மாறிவிடுகின்றன.  உண்ணும் வகையைச் சார்ந்த சில காளான்களை வெப்பமான நாளில் பறித்து, போதிய காற்றோட்டம் இல்லாத இடத்தில் வைத்திருந்தால், அவற்றை வீட்டுக்கு எடுத்துச்செல்லும்போதே அழுகிப்போய்விடுவதுண்டு. அதனால் தாவர உணவை சாப்பிடுகின்ற பலர் இந்த காளான்களை உணவாக எடுத்துக்கொள்வது கிடையாது. ஏனென்றால் நமது உடலை பாதுகாப்பதற்குத் தேவையான எல்லா மூலப்பொருள்களும் புதுமை மாறாத சத்வ உணவுகளிலிருந்துதான் கிடைக்கின்றன.

🌿வெங்காயமும் பூண்டும்:🌿

வெங்காயமும் பூண்டும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிப்பதாகவும், அவை குடல் புண்களை உண்டாக்குகின்றன அல்லது தீவிரப்படுத்துகின்றன என்றும் பல மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உடலில் அமிலத்தன்மை அதிகமானால் அது நோய்களுக்குரிய காரணங்களில் ஒன்றாய் ஆகிவிடும் என்பதால், வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடானது. மேலும் இவை உடலில் வெப்பத்தை அதிகரிப்பதால், அது மனதையும் பாதிக்கிறது. வெங்காயத்திலிருந்தும் பூண்டிலிருந்தும் வருகின்ற வாசனை கண்களின் திசுக்களை பாதித்து கண்ணீர் வர வைப்பது போல அவை மனதிலும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனால் மன அமைதியை அல்லது உயர்நிலை மெய்யுணர்வை பெற விரும்புகின்றவர்கள் இவற்றை சாப்பிடுவதில்லை.

🌿முட்டை:🌿

முட்டையில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளது. இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான காரணங்களில் இது முக்கிய காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு முட்டையிலும் 200 மி.கி. கொழுப்பு இருக்கிறது. இது 5 பவுண்டு எடையுள்ள ஒரு மீனில் உள்ள கொழுப்பைப் போல இரண்டு மடங்கு ஆகும். அதனால்தான் மருத்துவர்கள் தங்களுடைய இதய நோயாளிகளை முட்டை சாப்பிடவே கூடாது என்று அறிவுரை கூறுகின்றனர். அதிக அளவு முட்டைகளை சாப்பிடுவதால் காய்கறி உணவிலிருந்து கிடைக்கின்ற எல்லா பயன்களும் முழுமையாய் இழந்துவிடுகிறோம் என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் வாதிடுகின்றனர்.

(ஆனந்த மார்க - Food for Thought என்ற புத்தகத்திலிருந்து)

🙏குரு அருள் ஒன்றே துணை🙏

 குறிப்பு:

**இது கடுங்குளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பொருந்தும் *உ.ம்:* ஆண்டு முழுதும் உறைபணி சூழந்த அண்ட்டார்டிக்கா போன்ற பிரதேசங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் இதை மற்றவர்கள் சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

நன்றியுடன் அருண்குமார🙏

சிந்தனைக்கு உணவு- 2

ஆனந்த மார்க யோக அறிவியல்

சிந்தனைக்கு உணவு-  2

சாத்வீக ஆற்றலும் சத்வகுண உணவுகளும்:
-------------------------------------------------
இந்த ப்ரபஞ்சத்தின் முதல் ஆற்றலானது சுய உணர்வு, அன்பு, அமைதி, தூய்மை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கும் சத்வ ஆற்றலாகும். நம்முடைய மனதில் இந்த சத்வ ஆற்றலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது, நாம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருப்பதை உணரமுடியும். அந்த நிலையில் நம்முடைய மனம் உயர்மெய்யுணர்வை நோக்கிச் செல்கிறது. சத்வ ஆற்றல் அதிகமாக உள்ள உணவுகளை ‘சத்வ உணவுகள்’ என்று சொல்கிறோம். அவை நம்முடைய மனதை தெளிவாகவும் அமைதியாகவும் வைத்திருக்கின்றன. இந்த உணவுகள்தான் யோகிகளின் அடிப்படை உணவுகள். ஏனென்றால் இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவாகும். மனதை உயர் மெய்யுணர்வு மற்றும் தன்னுணர்வு  நிலைக்கு உயர்த்த விரும்புகின்றவர்களுக்கு இவை மிகச்சிறந்த உணவாகும்.

சத்வ உணவுகள்:
------------------------------
பழங்கள், பெரும்பான்மையான காய்கறிகள், பீன்ஸ் மற்றும் கொட்டைகள், தானியங்கள், பால் மற்றும் பால்பொருள்கள், சிறிதளவு மசாலாப் பொருள்கள் ஆகியவை சத்வ உணவுகளாககும். சத்வ உணவுகள் நமக்கு புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமப் பொருள்களையும் தருகிறது.

ரஜோ ஆற்றலும் ரஜோ உணவுகளும்:
--------------------------------------------------------------
இந்த ப்ரபஞ்சத்தின் இரண்டாவது ஆற்றல் ரஜோ ஆற்றலாகும். இது இயக்கத்தை, செயல்பாட்டை அல்லது மாற்றத்தை தடைசெய்கின்ற ஆற்றலாகும். நம்முடைய மனதில் இந்த ஆற்றல் ஆதிக்கம் செய்கின்ற போது  நாம் குழப்பத்தோடும், பதட்டத்தோடும், அமைதியற்ற நிலையிலும் இருப்போம். அமைதி பெற முடியாமலும் பதற்றம் குறையாமலும் இருப்போம். ரஜோ குண உணவுகள் உடல் உணர்வுகளையும் மன உணர்ச்சிகளையும் தூண்டக்கூடியவை, அதனால் நம்முடைய மனச் சமநிலையை பாதுகாப்பதற்காக அவற்றை குறைவாகவே சாப்பிட வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் அவை மனதை தொந்தரவு செய்வதோடு தியானம் போன்ற அதிநுட்ப காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமலும் செய்கிறது.

ரஜோ குண உணவுகள்:
-------------------------------------------
காபி மற்றும் தேநீர் போன்ற பானங்கள், கரியமில வாயு கலந்த பானங்கள், சாக்லேட்டுகள், காரமான சிவப்பு மிளகு, நொதிக்க வைத்த உணவுகள் மற்றும் சில மருந்துகள் ஆகியன ரஜோ குண உணவுகளாகும்.

தமோ ஆற்றலும் தமோ குண உணவுகளும்:
---------------------------------------------
மூன்றாவது ஆற்றல் தமோ ஆற்றல். மந்தநிலை, செயலற்ற தன்மை, சிதைவு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கான ஆற்றல் இது. உயிருள்ள எந்த உடலிலும் மற்ற இரண்டு ஆற்றல்களும் முழுமையாக மறைந்துபோய் தமோ ஆற்றல் மட்டும் ஆதிக்கம் செய்கின்றபோது இறப்பு நேரிடுகிறது. நம்முடைய மனதில் இந்த ஆற்றல் செயல்படுகின்றபோது நமக்கு உறக்கம் வருகிறது, மந்தநிலை, உற்சாகமின்மை, வலிமையற்ற உணர்வு மற்றும் செயலாற்ற விருப்பமின்மை ஆகிய தன்மைகளை நாம் உணருகிறோம்.

(ஆனந்த மார்க - Food for Thought என்ற புத்தகத்திலிருந்து)

🙏குரு அருளே துணை🙏

தொடரும்..........

சிந்தனைக்கு உணவு 1

🌸ஆனந்த மார்க யோக அறிவியல் 🌸
 🌸சிந்தனைக்கு உணவு🌸

யோக அறிவியல்
🌿🌿🌿🌿🌿🌿

இன்றைய நாகரிக உலகில் வியக்கத்தக்க வெற்றிகளை நாம் அடைந்திருந்தாலும் இன்றைய மனிதர்கள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மன அமைதியையும் மகிழ்வையும்  குறைவாகத்தான் பெற்றிருக்கிறார்கள். இதற்கு காரணம் நம்முடைய வாழ்வானது சமநிலையை இழந்துவிட்டதுதான். மக்கள் நெருக்கடி, மாசுநிறைந்த சுற்றுச்சூழல், வேகமான வாழ்க்கை மற்றும் வேலைச் சுமை, சரியான உடற்பயிற்சியின்மை, முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் அதிகமாக உண்ணும் பழக்கம், நம்மைச் சுற்றி எல்லா திசைகளிலும் எதிர்மறையான கவர்ச்சிகள் போன்ற இவை அனைத்தும் நம்முடைய உடலையும் மனதையும் கீழ்நிலைக்கு தள்ளுகின்றன. விஞ்ஞான முறையில் யோக பயிற்சிகளை செய்வதன் மூலம் சமநிலையான வாழ்வை மீண்டும் பெறுவதற்கான வழியை நாம் கற்றுக்கொள்ளலாம், ஆரோக்கியமான உடலையும் அமைதியான மனதையும் மீண்டும் பெறலாம்.
உடல் முன்னேற்றத்திலிருந்துதான் இந்தப் பயிற்சி துவங்குகிறது. ஏனென்றால் உடல்தான் முழுமுதற்பொருளை நோக்கி, நமது இலட்சியமாகிய முடிவில்லா பேரானந்த மெய்யுணர்வை நோக்கிப் பயணம் செய்வதற்குரிய வாகனமாக பயன்படுகிறது. அத்தகைய உடலை நாம் பராமரிக்க வேண்டுமானால் நாம் சாப்பிடுகின்ற உணவில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் உணவானது நம்முடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் ஆழமான விளைவுகளை உண்டாக்குகின்றது

🌸🙏🌸
ஆனந்த மார்க - Food for Thought - என்ற  புத்தகத்திலிருந்து



Wednesday, 18 December 2019

மனித உயிரியல் இரகசியங்கள்

https://youtu.be/lWsIPNMpOr8

வேறெங்கும் கேள்வியுறாத மனித மனதின் இரகசியங்களை சத்குரு பாபா அவர்கள் வெளிப்படுத்துகின்ற விதம் ..... வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு வரி விடாமல் மனதில் பதியவைக்க வேண்டிய குறிப்புக்கள். உலகமே வியக்கக் கூடிய, வாய்பிளந்து நிற்கக் கூடிய உயிரியல் உண்மைகளை இந்த சொற்பொழிவில் பாபா அவர்கள்  தந்துள்ளார்கள். நேரத்தை ஒதுக்கிவிட்டு பிறகு முழுவதும் பொறுமையாக கேளுங்கள், பிறகு நான் சொல்வது உண்மையா என்று சொல்லுங்கள். இதோ  அதற்கான யூ ட்யூப் லிங்க்


https://youtu.be/lWsIPNMpOr8