Sunday, 11 October 2020

 நீங்கள் எதை தியானிக்க வேண்டும்? 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

புன்னியம் மற்றும் பாவம் என்பதெல்லாம் கால எல்லைக்குள் நடைபெறுபவை. இவையெல்லாம் ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவில் எதுவும் செய்துவிடமுடியாது.

உதாரணமாக, பல சிறுவர்கள் ஒரு சாலையில் சென்றுகொண்டிருக்கிறார்கள், அதில் ஒரு சிறுவன் சாக்கடையில் விழுந்துவிடுகிறான். அவனுடைய ஆடையும் அவனுடைய உடலும் சகதியாகிவிட்டது. அந்த வழியில் செல்லுகின்ற மற்றவர்கள் வேண்டுமானால் அந்த பையனைப் பார்த்து சிரிக்கலாம், ஆனால் அந்த பையனுடைய தந்தை அவனை அந்த நிலையில் பார்க்கும்போது அவர் என்ன செய்வார்? அவர் தன்னுடைய சொந்த மகனைப் பார்த்து சிரிப்பாரா? மாட்டார், மாட்டார் சிரிக்கமாட்டார். அவர் என்ன செய்வார்? அவரே அந்த சாக்கடையில் இறங்கி அவருடைய மகனை தூக்கி தன்னுடைய மடிமீது வைத்து அவனுடைய ஆடைகளை சுத்தம்செய்வார், அவனுடைய உடலை சுத்தம் செய்வார். அதற்குப்பிறகு அவனிடம், “என் மகனே, வழியில் கவனமாக நடக்க வேண்டும்” என்று அறிவுரை கூறுவார்.


பாவம் செய்தவர்கள் இந்த சாக்கடையில் விழுந்த பையனைப் போன்றவர்கள்தான். உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர், மேலானவர் மற்றும் கீழானவர், எல்லோருமே அவருக்கு சமமானவர்கள்தான். ஏனென்றால் சொர்கம் என்பதும் அவருடைய படைப்பே, நரகம் என்பதும் அவருடைய படைப்பே. அவர் சொர்கத்தில்தான் இருக்கிறார் என்று நாம் சொன்னால், அது சரியான வாக்கியம் கிடையாது. ஏனென்றால் அவர் நரகத்திலும் இருக்கிறார். அதனால் அவருடைய மகன்களும் அவருடைய மகள்களும் எப்போதுமே தனியாக இருப்பதில்லை. அவர் உங்களுடன் நரகத்திலும் இருக்கிறார். 


நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் மாபெரும் தந்தையின் பிள்ளை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பாவி என்றோ, கீழானவர் என்றோ நினைக்கவே கூடாது. நீங்கள் ஒரு பாவி என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் பாவத்தை தியானம் செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்! அவ்வாறு பாவம் உங்களுடைய தியானத்தின் உருவமாய் இருக்கும்போது உண்மையிலேயே நீங்கள் ஒரு பாவியாக ஆகிவிடுவீர்கள். ஏனென்றால் ஒரு மனிதன் அவனுடைய அல்லது அவளுடைய எண்ணத்தின் பொருளாகவே ஆகிவிடுவான். “நான் ஒரு பாவி”, “நான் ஒரு பாவி” என்று எண்ணிக்கொண்டே இருந்தால் நீங்கள் உண்மையிலேயே பாவியாக ஆகிவிடுவீர்கள். உங்களுடைய மனப்பாங்கு எப்படி இருக்கவேண்டுமென்றால், உண்மையிலேயே நீங்கள் ஒரு பாவியாக இருந்தாலும் அதை மறந்துவிட்டு, “நான் மாபெரும் தந்தையின் பிள்ளை, நான் மாபெரும் தந்தையின் பிள்ளை” என்று எண்ண வேண்டும். இவ்வாறு நீங்கள் மாபெரும் தந்தையை தியானம் செய்துகொண்டே இருந்தால், நீங்கள் உங்கள் தந்தையோடு ஒன்றாய் கலந்துவிடும் நாள் ஒன்று நிச்சயமாக வரும். ஆனால் “நான் ஒரு பாவி”, “நான் ஒரு பாவி, என்னை காப்பாற்று, ஓ பரம தந்தையே என்னை காப்பாற்று என்று எண்ணிக்கொண்டே இருப்பது தவறான அனுகுமுறையாகும். அதற்கு பதிலாக, “நான் உன்னுடைய மகன், நான் உன்னுடைய மகள், ஓ தந்தையே என்னை உன் மடிமீது வைத்துக்கொள், நான் உன்னுடைய மகன், நான் உன்னுடைய மகள்” என்று சொல்ல வேண்டும்.


 உங்களுடைய அனுகுமுறை இப்படித்தான் இருக்க வேண்டும். எது உங்களுக்கு தேவையில்லையோ அதை நீங்கள் மறந்துவிட வேண்டும்.


🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 23ம் பாகத்திலிருந்து)

No comments:

Post a Comment