Tuesday, 6 October 2020

அறிவின் விடுதலை 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 பணம் என்ற செல்வத்தோடு, இந்த உலகின் ஐந்து அடிப்படை காரணிகளும் இந்த ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனுக்காக பரமபுருஷனால் உருவாக்கப்பட்டவை. ஒரே பரம புருஷனுடைய பாதுகாப்பில் வாழ்வதும், சரியான இணக்கத்தோடு வாழ்வதும், வளர்வதும், ஒருவருடைய வாழ்வை எல்லா வகையிலும் வெற்றிகரமாக உருவாக்குவதும், ஒவ்வொரு நபருக்கும் உள்ள பிறப்புரிமையாகும். தங்களுடைய சக மனிதர்களையே சுரண்டுகின்ற இயல்புடைய ஒருசில சந்தர்பவாதிகள் நிச்சயமாக இருக்கின்றனர். அவர்கள் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக, ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் என்றைக்குமே புறக்கணிக்கப்படுவது இயற்கையின் நியதி என்றும், அந்த மனிதர்கள் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை தொடர்ந்து அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதும், ஒரு சில மனிதர்கள் அளவில்லா செல்வத்தில் புரள வேண்டும் என்பதும் விதியால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் பகுத்தறிவற்ற தர்க்க நியாயத்தை முன் வைப்பார்கள். இதுவும் மூடநம்பிக்கைதான். புத்தியுள்ளவர்களும், நீதியுள்ளவர்களும் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும், மேலும் இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்தியாக வேண்டும். ஏனென்றால் மனிதர்களின் சுதந்திரமான அறிவின் குரல்வளையை நெறிக்கின்ற எதுவாயினும் அது அவர்களுடைய அறிவு விடுதலைக்கு நிச்சயமாக தடைக்கல்லே ஆகும்.


🌸 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌸


(புதிய மனிதநேயம்)

No comments:

Post a Comment