Wednesday, 7 October 2020

 இந்த ப்ரபஞ்சத்தில் இறைவனின் எண்ண அலைகள் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறது. 

👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺

மனிதர்கள் மரங்களைப் போன்று ஜடமாக உள்ளனர். மனித தர்மத்தை கடைபிடிக்கும் ஒருவன்தான் உண்மையிலேயே மனிதன் என்ற சொல்லிற்கு ஏற்ப நடப்பவன். அப்படி இல்லாதவனை 'மனிதன்' என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம்? ஜமீன்தாரரே (நிலச் சொந்தக் காரர்)  இல்லை  என்றபோது,  ராய் சௌத்ரி (நிலச் சொந்தக்காரரை அழைக்கின்ற பட்டப் பெயர்) என்று யாரை அழைப்பது? மனித தர்மம் அல்லது பாகவத தர்மம் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளது. அவை: விஸ்தார, ரஸ மற்றும் சேவா என்பனவாகும்.

   மனிதர்கள் மன விரிவாக்கத்தை விரும்புகிறார்கள். ஒரே இடத்தில் அடைந்து கிடக்க விரும்பாமல் அவர்கள் எல்லா நிலைகளிலும் விரிவடைய விரும்புகிறார்கள். இந்த விரிவாக்கத்திற்கான உந்துதல்தான் மனிதர்களின் பொதுவான இயல்பாகும். உடல் அழியும் வரை அது மனிதனுக்குள் நீடித்திருக்கும். இந்த விரிவாக்கத்திற்கு முயற்சி செய்யாதவர்களும், மூடநம்பிக்கை, மதநம்பிக்கை போன்றவற்றைப் புகுத்தி அதன் மூலமாக மற்றவர்களின் விரிவாக்கத்திற்குத் தடை செய்பவர்களும் நிச்சயமாக பாவம் செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். உடன்பிறந்த இந்த குணாதிசயங்களை விரிவு செய்ய முயற்சி செய்யாதவர்கள் மிருகங்களே ஆவர்.  நாம் யாருடைய வளர்ச்சியையும் தடுக்கக் கூடாது, யாருடைய விரிவாக்கத்திற்கும் தடையாய் இருக்கவும் கூடாது. அதற்கு மாறாக, விரிவாக்கத்திற்கு உண்மையாக முயற்சி செய்யாதவர்களுக்கு ஊக்கம் அளித்து விரிவடையச் செய்ய வேண்டும். முன்னேற்றத்தின்  பாதையை நாம் ஒருபோதும் மூடிவிடக் கூடாது. இதுவேஜ ' விஸ்தார ' என்பது. 


   ' ரஸ ' என்றால் 'ஓட்டம்',  இந்த ஓட்டமே இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்தும், காத்தும் வருகிறது. ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் இயக்கம் என்பது உள்ளது. எல்லாமே ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் வேகமும் உண்டு. எதுவும் அசையாமல் ஓரிடத்தில் நிற்பதில்லை. பரமபுருஷனைப் பற்றி சொல்லும்போது " ராஸஹ வை சஹ " என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, "ரஸ"த்தின் இருப்பிடமே அவன்| என்று பொருள். இந்த ப்ரபஞ்சத்தின் ஓட்டமாக     அவன்   இருக்கிறான். அவனுடைய சந்ததிகளில் மனிதர்களே மிக அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். ஆகவே அவர்களிடத்திலும் இந்த ஓட்டம் அமைந்திருப்பது இயற்கையே. ஆகவேதான் 'மனித வாழ்வு என்பது ஒரு கொள்கை ஓட்டம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் 'மனிதன் என்பவன் ஒரு பகுத்தறிவு படைத்த விலங்கு' என்ற பழைய கருத்து தவறானது. அது மனிதனின் மதிப்பைக் குறைக்கிறது. 


   தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பொதுவான குணாதிசயங்களை அதாவது, சாப்பிடுவது, உறங்குவது போன்ற சிலவற்றை மனிதர்களும் பெற்று இருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் விலங்குகளோ அல்லது தாவரங்களோ அல்ல. யானைகளும் எறும்புகளும் கூட சாப்பிடுகின்றன, உறங்குகின்றன. அதனால் அவை மனிதனுக்குச் சமமாகி விட முடியுமா? முடியாது.


 'சேவா' . மனிதர்களிடத்தில் இயற்கையாய் அமைந்துள்ள பண்பு மற்றவர்களுக்கு சேவை செய்வதே ஆகும். வியாபாரக் கொடுக்கல்-வாங்கலுக்கான உள்நோக்கம் 'எனக்கு ஒரு ரூபாய் கொடு, அதற்கு பதிலாய் ஒரு ரூபாய் மதிப்புள்ள பொருளை எடுத்துக்கொள்' என்பதே ஆகும். இப்படிப்பட்ட கொடுக்கல்-வாங்கலுக்கு இரண்டு பக்கம் உண்டு. ஆனால் 'சேவா' என்பதற்கு ஒரு பக்கம்தான் உண்டு. அதாவது, 

"எல்லாவற்றையும் பரமபுருஷனுக்குக் கொடுப்பேன் ஆனால் பதிலுக்கு எதையும் திரும்ப பெறமாட்டேன்' என்பது. நான் பரமபுருஷனுடன் ஒன்றாகி விட மட்டுமே விரும்புகிறேன். அவனே இந்த ப்ரபஞ்சத்தின் விலைமதிக்க முடியாத பொக்கிஷம். ஆகவே என்னிடமுள்ள விலைமதிப்பற்ற ஒன்றைக் கொடுத்து விடுகிறேன். அதாவது, என்னுடைய வாழ்வையே கொடுத்து விடுகிறேன். மிகவும் விலை  மிக்க பொருட்களை கொடுத்தே மற்றொரு விலை மதிப்பு மிக்கப் பொருளை பண்ட மாற்றம் செய்ய முடியும். அதனால் எனது வாழ்வின் மிகச் சிறிய பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து விடுகிறேன். ஏன்  என்   வாழ்வின்   மிகச்  சிறிய பகுதியை மட்டும் என்னிடம் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் நான் சிலவற்றைப் பார்க்க விரும்புகிறேன், சிலவற்றை கேட்க விரும்புகிறேன், சிலவற்றை பெற விரும்புகிறேன். ஆனால் விலையை நான் கொடுக்காவிட்டால் விரும்பிய பொருள் கிடைக்காது. இந்த விஸ்தார, ரஸ மற்றும் சேவா என்ற மூன்றும் மானவ தர்மம் அல்லது பாகவத தர்மத்தின் பகுதிகளாகும். இந்த பாகவத தர்மத்தில்தான் மனிதனின் சிறப்பு அடங்கி இருக்கிறது. இதுவே மனிதர்களின் தலையாய தர்மம் ஆகும். ஆகவேதான், 'ஒருவனுடைய சொந்த தர்மத்தை கடைபிடிப்பது கடினமானதாக இருந்தாலும், அதாவது மானவ தர்மம் அல்லது பாகவத தர்மம் இன்ப துன்பங்கள் நிறைந்ததாய் இருந்தாலும், மனிதர்கள் இந்த தர்மத்தை விடாது கடை பிடிக்க வேண்டும். இதன் மூலமாக தங்களுடைய உண்மையான அடையாளத்தை அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்| என்று சொல்லப்பட்டிருக்கிறது.


🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷 


(ஆனந்த வச்சனாம்ருதம் 4ம் பாகத்திலிருந்து)

No comments:

Post a Comment